கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் பொது நிவாரண நிதிக்கு அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் பொது நிவாரண நிதிக்கு அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனன்யா நானா ஹோம்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் சார்பில் மருத்துவர்களுக்கு N95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அனன்யா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் குமார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்களிடம் வழங்கினார்.