நீலகிரியில் பழங்குடியின மக்கள் 1400 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய சாந்திராமு எம்எல்ஏ!

நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட தெங்குமாரடா பழங்குடியினர் கிராமம் மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு தனது சொந்த செலவில் வழங்கினார்.

நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட தெங்குமாரடா பழங்குடியினர் கிராமம் மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு தனது சொந்த செலவில் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தெங்குமாரடா பழங்குடியின கிராமத்திற்கு செல்ல உதகை, கோத்தகிரி ஆகிய பகுதிகளிலிருந்து, கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களான பவானி சாகர் வழியாக மட்டுமே செல்ல முடியும். சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் கரடு முரடான சாலை வழியாக சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பிறகே சென்றடைய முடியும். 

144 தடை உத்தரவினால் தெங்குமாரடா கிராம மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். இவர்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்ய 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய மங்கலம் தான் வர வேண்டும். 



இந்நிலையில், தெங்கு மாரடா பழங்குடியின கிராமத்திற்கு பெரும்பாலும் யாரும் செல்ல முடியாத நிலையில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு 5 டன் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை சுமார் 120 கிலோ மீட்டர் பயணித்து பழங்குடியின மக்களுக்கு 18 வகையான தொகுப்பு காய்கறிகள் சொந்த செலவில் வழங்கினார். 

மேலும், தெங்கு மாரடா பஞ்சாயத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கெளரவ படுத்தி அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி ஆகிய அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

இதேபோல, குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் ராணுவப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என மொத்தம் ஆயிரத்து நானூறு பேருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டது. 

வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி. பலிச்சா, சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...