வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம்!

கோவை: வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை: வால்பாறை ஸ்டான்மோர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் காய்கறி பைகள் விநியோகம் செய்யப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எவ்வித தொழில்களும் செய்யமுடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வருவாயின்றி தவித்து வரும் மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். 



இந்நிலையில், வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஸ்டோன்மோர் எஸ்டேட், சவராங்காடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு ஸ்டான்மோர் பகுதி தி.மு.க பிரமுகர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் காய்கறிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

வால்பாறை வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் காய்கறி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். ஸ்டான்மோர் பகுதி தி.மு.க நிர்வாகி எஸ் ஆர்.எஸ்.சுரேஷ் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பால்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் செல்வம், ஜே.பாஸ்கர், அம்பிகை சுப்பையா இ.கா பொன்னுச்சாமி டென்னிஸ், செந்தில், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...