கோவையில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர். 

கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. 144 தடை உத்தரவு காரணமாக கல்லூரிகள் இயங்கவில்லை. 

மேலும், தன்னார்வலர்கள் வெளிவர இயலாத நிலையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைகள் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்ததான முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர். 



கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இம்முகாமை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி துவக்கி வைத்தார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...