கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்த தானம் முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர்.
கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. 144 தடை உத்தரவு காரணமாக கல்லூரிகள் இயங்கவில்லை.
மேலும், தன்னார்வலர்கள் வெளிவர இயலாத நிலையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு இரத்தம் தேவைகள் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று இரத்ததான முகாமிற்கு இன்று ஏற்பாடு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இம்முகாமை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி துவக்கி வைத்தார்.