வால்பாறையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 வழங்கிய கஸ்தூரி வாசு எம்எல்ஏ

கோவை: வால்பாறையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 மற்றும் காய்கறிகள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை: வால்பாறையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 மற்றும் காய்கறிகள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை, ஆட்டோக்கள் டாக்சிகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும் திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதாலும் நாதஸ்வர கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.



இதனால் தொழில் இல்லாமல் வாடி வரும் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டாக்சி லாரி, டெம்போ ஓட்டுனர்கள், நாதஸ்வர வாத்திய குழுவினருக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஒவ்வொருவருக்கும் நிவாரண உதவியாக தலா ஆயிரம் ரூபாயும் காய்கறி பைகளை வழங்கினார். சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து நிவாரணத்தை வாங்கிச்சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, நகர செயலாளர் மயில் கணேசன், சலாவுதீன், பொன்கனேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...