கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம்போல செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம்போல செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை, கோவை, மதுரையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஞாயிறு காலை 6 மணி முதல், புதன் கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல், 28ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்:-
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
அதேசமயம், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை, கோவை, மதுரையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஞாயிறு காலை 6 மணி முதல், புதன் கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல், 28ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்:-
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
அதேசமயம், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.