திருப்பூர்: திருப்பூரில் நிவாரண பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் நிவாரண பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் பூம்புகார் நகர் மற்றும் வீரபாண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையாக எந்தவித நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக காவல்துறையினர் நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் பூம்புகார் நகர் மற்றும் வீரபாண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையாக எந்தவித நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக காவல்துறையினர் நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.