வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் நடவடிக்கை

கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வால்பாறை நகருக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனை அடுத்து வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் சிறப்பு ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் நகரில் பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. 



வால்பாறை நகருக்கு ஊரடங்கு உத்தரவை மீறி இன்று வந்த வாகனங்களுக்கு மஞ்சள் கலர் வர்ணம் பூசப்பட்டது. மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை மட்டுமே வரவேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 



மேலும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கலர் பூசப்படும் இதன் படி அவர்கள் வால்பாறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...