கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாகனங்களுக்கு பெயின்ட் அடித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வால்பாறை நகருக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனை அடுத்து வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் சிறப்பு ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் நகரில் பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

வால்பாறை நகருக்கு ஊரடங்கு உத்தரவை மீறி இன்று வந்த வாகனங்களுக்கு மஞ்சள் கலர் வர்ணம் பூசப்பட்டது. மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை மட்டுமே வரவேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கலர் பூசப்படும் இதன் படி அவர்கள் வால்பாறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வால்பாறை நகருக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனை அடுத்து வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் சிறப்பு ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் நகரில் பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

வால்பாறை நகருக்கு ஊரடங்கு உத்தரவை மீறி இன்று வந்த வாகனங்களுக்கு மஞ்சள் கலர் வர்ணம் பூசப்பட்டது. மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் இதே வியாழக்கிழமை மட்டுமே வரவேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கலர் பூசப்படும் இதன் படி அவர்கள் வால்பாறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.