நீலகிரியில் ஓவேலி பகுதியில் மீண்டும் சாராய வேட்டை; 15 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

நீலகிரியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்களுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி அவர்களுக்கு நியூவோப் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய சூண்டி என்ற இடத்தில் பழைய சாராய வியாபாரி மணிவேல் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் கூடலூர் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவின் பேரில் நியூ ஹோப் உதவி ஆய்வாளர் ரவி, கூடலூர் சிறப்பு தனிப்படை பிரிவு செல்வராஜ், சியாபுதீன், பரதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இப்பகுதியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 



தனிப்படையினர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் அருகில் சோதனை செய்து அருகிலிருந்த தோட்டத்திலிருந்து சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.



கடந்த இரண்டு நாட்களில் ஓவேலி பகுதியில் சுமார் 35 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...