நீலகிரியில் ஓவேலி பகுதியில் மீண்டும் சாராய வேட்டை; 15 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

நீலகிரியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்களுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி அவர்களுக்கு நியூவோப் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய சூண்டி என்ற இடத்தில் பழைய சாராய வியாபாரி மணிவேல் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் கூடலூர் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவின் பேரில் நியூ ஹோப் உதவி ஆய்வாளர் ரவி, கூடலூர் சிறப்பு தனிப்படை பிரிவு செல்வராஜ், சியாபுதீன், பரதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இப்பகுதியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 



தனிப்படையினர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் அருகில் சோதனை செய்து அருகிலிருந்த தோட்டத்திலிருந்து சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.



கடந்த இரண்டு நாட்களில் ஓவேலி பகுதியில் சுமார் 35 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...