ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என மாநிலங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்!

கோவை: மாறுபட்ட முடிவுகள் வருவதாக நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


கோவை: மாறுபட்ட முடிவுகள் வருவதாக நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,601ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 590ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, கொரோனா தொற்றை கண்டறிய பிசிஆர் முறை ஏற்கனவே உள்ள நிலையில், 30 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்வதற்காக ரேபிட் கிட் டெஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் வருவதாக ராஜஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. 

அதே போல, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் மாறுபட்ட பரிசோதனை முடிவுகள் வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆய்வு செய்து வருவதாகவும், மீண்டும் எப்போது பயன்படுத்தலாம் என்று விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட்களை கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...