மேட்டுப்பாளையத்தில் 3000 தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை மக்கள் வேலையிழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வேலைக்கு சென்றதால் தான் சோறு என்ற நிலையில் வேலையின்றி கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சி சார்பில் இன்று பொதுமக்களுக்கு கொரானோ நிவாரண பொருளாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பத்து லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 



பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகளை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக பொருட்கள் எடுத்துச்செல்லபட்டு வினியோகம் செய்யப்பட்டன. 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...