கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேப்பாளையம் ஊராட்சி தலைவர் சார்பில் 3000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரானோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை மக்கள் வேலையிழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வேலைக்கு சென்றதால் தான் சோறு என்ற நிலையில் வேலையின்றி கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சி சார்பில் இன்று பொதுமக்களுக்கு கொரானோ நிவாரண பொருளாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பத்து லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக பொருட்கள் எடுத்துச்செல்லபட்டு வினியோகம் செய்யப்பட்டன.
கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை மக்கள் வேலையிழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வேலைக்கு சென்றதால் தான் சோறு என்ற நிலையில் வேலையின்றி கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நபர்கள் உதவி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சி சார்பில் இன்று பொதுமக்களுக்கு கொரானோ நிவாரண பொருளாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பத்து லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக பொருட்கள் எடுத்துச்செல்லபட்டு வினியோகம் செய்யப்பட்டன.