கோவை கோவில் மேடு பகுதியில் 6 வயது சிறுவன், பல காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே 6 வயது சிறுமி உடலில் பல காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே 6 வயது சிறுவன் உடலில் பல காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த ராஜதுரையின் மகன் அபிஷேக் (6). இந்த சிறுவன் இன்று மதியம் திடீரென உடல்நிலை மோசமாகி மயக்கம் அடைந்ததாக சிறுவனின் பெற்றோர் அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல கோவில் மேடு செக்போஸ்ட் அருகே தூக்கி வந்தனர்.

இதைத் தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனின் உடல்நிலையை பரிசோதனை செய்த போது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், இந்த சிறுவனின் மரணம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் இந்த சிறுவனின் உடல் முழுவதும் தடித்த நிலையில் பல காயங்கள் இருந்துள்ளது. ஆகவே, சிறுவன் கொடூரமான முறையில் சித்திரவதைபடுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...