கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்..!

கோவை: கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு வாரங்கள் மிக முக்கியமான வாரங்கள் என்பதால் ஊரடங்கை உத்தரவை போலீசார் கடுமையாக்கி வருகின்றனர். 

அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் சுற்றுவோரின் வாகனங்களில் வண்ணப் பெயிண்ட் பூசப்பட்டு மறு முறை வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு பகுதிகளில் இளைஞர்கள் கூடி பேசுவது விளையாடுவது போன்ற செயல்படுவதால் நகர் புறங்களில் உள்ள தெருக்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், இடையர்பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை துவங்கி உள்ளனர். 

அதேபோல, தனிமை படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரேனும் வெளியேறுகிறார்களா என்பதையும் கண்காணிக்கின்றனர். கேமராவை பார்த்தால் கூடி நிற்கும் பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு செல்வதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் போத்தனூர் சுந்தராபுரம் பகுதிகளிலும் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...