கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாவட்ட தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாவட்ட தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை சுங்கம் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் அயூப் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, லோட்டஸ் மணிகண்டன் மீது இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுங்கம் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் அயூப் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, லோட்டஸ் மணிகண்டன் மீது இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.