கோவை: மேட்டுப்பாளையத்தில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் பெருமளவு குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச் சரகம், நெல்லிமலை காப்புக் காட்டுப் பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் வெளியேறிய ஒற்றை ஆண் யானை குடியிருப்புகள் அதிகம் உள்ள சமயபுரம் பகுதிக்குள் புகுந்து சாலையில் சுற்றித்திரிந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனத் துறையினா் அந்த இடத்துக்குச் சென்று பொதுமக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என உஷாா்படுத்தினா்.
இதையடுத்து, பட்டாசுகளை வெடித்து யானையை வனப் பகுதிக்குள் துரத்தினா். யானை நடமாட்டத்தால் தாங்கள் அச்சத்தில் உள்ளதாக சமயபுரம் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் பெருமளவு குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச் சரகம், நெல்லிமலை காப்புக் காட்டுப் பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் வெளியேறிய ஒற்றை ஆண் யானை குடியிருப்புகள் அதிகம் உள்ள சமயபுரம் பகுதிக்குள் புகுந்து சாலையில் சுற்றித்திரிந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனத் துறையினா் அந்த இடத்துக்குச் சென்று பொதுமக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என உஷாா்படுத்தினா்.
இதையடுத்து, பட்டாசுகளை வெடித்து யானையை வனப் பகுதிக்குள் துரத்தினா். யானை நடமாட்டத்தால் தாங்கள் அச்சத்தில் உள்ளதாக சமயபுரம் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.