உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி

நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.

தமிழக அரசு கொரோனோ வைரசை ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவரவர் மாவட்டங்களிலும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா ஓய்வின்றி மாவட்டம் முழுவதுமே நேரில் சென்று ஆலோசனைகளை உத்தரவுகளை கூறி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.



அதன்படி, உதகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் இணைந்து உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கும் இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஊராட்சி தலைவர் மாயன், இன்கோசர்வ் தலைவர் சிவக்குமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், பேரகல் நஞ்சுண்டன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...