கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் முறையான உணவுகள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனால் மாணவர்களிடம் தங்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் முறையான உணவுகள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனால் மாணவர்களிடம் தங்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.