கோவையில் முறையான உணவு வழங்க வேண்டி பயிற்சி மருத்துவர்கள் புகார்..! அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் முறையான உணவு வழங்கப்பட்டது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 

இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் முறையான உணவுகள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனால் மாணவர்களிடம் தங்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...