கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

கோவை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சை ஏற்பாடுகளும் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது.

கோவை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சை ஏற்பாடுகளும் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு இ எஸ் ஐ மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த 26 வயது மதிப்புடைய ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த மாணவி தற்போது சிகிச்சைக்குப்பின் நலமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக போத்தனூர் ரயில்வே பெண் மருத்துவர், அவரது 10 மாத குழந்தை, மற்றும் அவரது வீட்டில் பணிப்புரிந்த பணியாளர் மற்றும் திருப்பூரை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஆகிய 5 பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா அறிகுறிகள் வராத காரணத்தால் ஐந்து பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த ஐந்து பேரும் 28 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, 300 பேருக்கு கோவையில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 228 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் இஎஸ்ஐ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறும்போது:-

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

கொரோனா தொற்றை இரண்டாம் கட்டத்திலேயே வைத்திருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இஎஸ்ஐ மருத்துவமனை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் தேவைக்கேற்ப அளவு நம்மிடம் உள்ளது. பொதுமக்கள் 144 தடை உத்தரவை மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவிற்கு கட்டிடங்களும், வளாகங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வெண்டிலேட்டர் தயார் நிலையிலும், கூடுதலாக வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் நமக்கு வந்து சேரும்.

மேலும், வருகின்ற பத்தாம் தேதிக்கு மேல் முதல்வர் அறிவித்த ரேப்பிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனையை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்கு கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு படியாக அன்னூர், ஆனைமலை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

நேற்றைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட மதுக்கரை, குனியமுத்தூர், கரும்புக்கடை , போத்தனூர் போன்ற பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஈ எஸ் ஐ மருத்துவனையில் 25 மருத்துவர்களும் 20 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா வார்டில் சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...