கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர். இதில் இதுவை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர். இதில் இதுவை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும், கலவரத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஈடுபட்டனர்.

மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களுடன் போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருக்கும் தமமுக கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமமுக கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தினால் கோவை ரயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.