கோவையில் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து பணம் பறித்த இளைஞர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜிஷ்ணு (28). புகைப்படக் கலைஞரான இவர் ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்தபடி சினிமா துறையில் தொடர்பு இருப்பதாக தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பல பெண்களை தன் வசப்படுத்தவும் முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞருக்கு கோவையைச் சேர்ந்த திருமணமான 38 வயது மதிப்புடைய பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து இளைஞர் விஷ்ணு அந்த பெண்ணிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். இப்படி சுமார் மூன்று ஆண்டுகளாக பழகி வந்த இவர்களுக்குள் திடீரென வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு தான் கேட்கும் பணம் தரவில்லை என்றால் இருவரும் ஒன்றாக இருந்தது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜிஸ்னு, ஒரு லட்ச ரூபாய் பணம் தருமாறு தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஜிஷ்ணு குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஷ்ணுவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...