கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜிஷ்ணு (28). புகைப்படக் கலைஞரான இவர் ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்தபடி சினிமா துறையில் தொடர்பு இருப்பதாக தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பல பெண்களை தன் வசப்படுத்தவும் முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞருக்கு கோவையைச் சேர்ந்த திருமணமான 38 வயது மதிப்புடைய பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து இளைஞர் விஷ்ணு அந்த பெண்ணிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். இப்படி சுமார் மூன்று ஆண்டுகளாக பழகி வந்த இவர்களுக்குள் திடீரென வெறுப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு தான் கேட்கும் பணம் தரவில்லை என்றால் இருவரும் ஒன்றாக இருந்தது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜிஸ்னு, ஒரு லட்ச ரூபாய் பணம் தருமாறு தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஜிஷ்ணு குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஷ்ணுவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.