கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபராகவும், தேமுதிகவின் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சொந்த பணி நிமித்தம் காரணமாக கோவை வந்து, பின்னர் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கிணத்துக்கடவு அருகே இவருடன் காரில் பயணித்த இருவர் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே இறங்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த சந்திரசேகர், கிஷோர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் திடீரென காரை வளைத்துக்கொண்டு கோவை சாலை நோக்கி சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மற்றொரு நபரான செந்தில் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து மேற்கு மண்டலத்தில் இரண்டு இளம் பத்திரிகையாளர்கள் சாலை விபத்தில் பலியாகிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபராகவும், தேமுதிகவின் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சொந்த பணி நிமித்தம் காரணமாக கோவை வந்து, பின்னர் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கிணத்துக்கடவு அருகே இவருடன் காரில் பயணித்த இருவர் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே இறங்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த சந்திரசேகர், கிஷோர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் திடீரென காரை வளைத்துக்கொண்டு கோவை சாலை நோக்கி சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மற்றொரு நபரான செந்தில் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து மேற்கு மண்டலத்தில் இரண்டு இளம் பத்திரிகையாளர்கள் சாலை விபத்தில் பலியாகிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.