பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபராகவும், தேமுதிகவின் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சொந்த பணி நிமித்தம் காரணமாக கோவை வந்து, பின்னர் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிணத்துக்கடவு அருகே இவருடன் காரில் பயணித்த இருவர் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே இறங்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த சந்திரசேகர், கிஷோர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் திடீரென காரை வளைத்துக்கொண்டு கோவை சாலை நோக்கி சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மற்றொரு நபரான செந்தில் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து மேற்கு மண்டலத்தில் இரண்டு இளம் பத்திரிகையாளர்கள் சாலை விபத்தில் பலியாகிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...