சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி திட்டமிட்டு நடத்தப்பட்டது - கு ராமகிருட்டினன்

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தடியடி நடத்திவிட்டு தற்போது தமிழக அரசு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதாக, திருப்பூரில் மூன்றாவது நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டினன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தடியடி நடத்திவிட்டு தற்போது தமிழக அரசு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதாக, திருப்பூரில் மூன்றாவது நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டினன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குடியுரிமை பாதுகாப்பு இளைஞர் கூட்டமைப்பினரை சந்தித்த ராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

"இந்தியாவில் ஒன்பது மாநிலங்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR, NRC ஆகியவை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பாஜகவிற்கு அடிமையாக உள்ள தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற தயங்கி வருவதாகவும் அது நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்", என தெரிவித்தார். 



மேலும், வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசு திட்டமிட்டு தான் தடியடி நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் தற்போது இஸ்லாமியர்கள் மீது தமிழக அரசு பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.



மூன்றாவது நாள் தொடர் தர்ணா போராட்டத்திலும் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...