சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி திட்டமிட்டு நடத்தப்பட்டது - கு ராமகிருட்டினன்

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தடியடி நடத்திவிட்டு தற்போது தமிழக அரசு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதாக, திருப்பூரில் மூன்றாவது நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டினன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தடியடி நடத்திவிட்டு தற்போது தமிழக அரசு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதாக, திருப்பூரில் மூன்றாவது நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டினன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குடியுரிமை பாதுகாப்பு இளைஞர் கூட்டமைப்பினரை சந்தித்த ராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

"இந்தியாவில் ஒன்பது மாநிலங்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR, NRC ஆகியவை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பாஜகவிற்கு அடிமையாக உள்ள தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற தயங்கி வருவதாகவும் அது நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்", என தெரிவித்தார். 



மேலும், வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசு திட்டமிட்டு தான் தடியடி நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் தற்போது இஸ்லாமியர்கள் மீது தமிழக அரசு பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.



மூன்றாவது நாள் தொடர் தர்ணா போராட்டத்திலும் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...