கோவை கோனியம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்கக் கோரி பாஜகவினர் மனு

கோவை: கோவையில் கோனியம்மன் கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்க கோரி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் கோனியம்மன் கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்க கோரி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம்.

தேர்ப்பவனியானது, ராஜ வீதியில் இருக்கும் தேர், நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடையும். இந்த தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், கோவையில் இந்த வருடம் கோனியம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்கக் கோரி பாஜக சார்பில் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...