நீலகிரி: கோத்தகிரியில் தாந்தரோடு கிராமத்தில் படுக கிறிஸ்தவ நல சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு நேற்று தொடங்கிவைத்தார்.
நீலகிரி: கோத்தகிரியில் தாந்தரோடு கிராமத்தில் படுக கிறிஸ்தவ நல சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு நேற்று தொடங்கிவைத்தார்.

கோத்தகிரியில் உள்ள தாந்தரோடு கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல், எலும்பு முறிவு, பொதுநல நல மருத்துவர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இதில் மருத்துவர்கள் ஜேசன் தாமஸ், அனுஷா இவாஞ்சலின், பிரதீபா, கமலாக்கர் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி பேரூராட்சி செயலாளர், நீலகிரி மாவட்ட அறநிலையத் துறை அறங்காவலர் சுப்ரமணி, மீதேன் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் ஜேக்கப், கொணவக்கரை டீ பிளான்டேஷன்ஸ் உரிமையாளர் பிரீத்தம், தாஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ், துணைத்தலைவர் சம்பத், செயலாளர் ஜீவா, பொருளாளர் ஜெபகுமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கோத்தகிரியில் உள்ள தாந்தரோடு கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல், எலும்பு முறிவு, பொதுநல நல மருத்துவர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இதில் மருத்துவர்கள் ஜேசன் தாமஸ், அனுஷா இவாஞ்சலின், பிரதீபா, கமலாக்கர் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி பேரூராட்சி செயலாளர், நீலகிரி மாவட்ட அறநிலையத் துறை அறங்காவலர் சுப்ரமணி, மீதேன் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் ஜேக்கப், கொணவக்கரை டீ பிளான்டேஷன்ஸ் உரிமையாளர் பிரீத்தம், தாஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ், துணைத்தலைவர் சம்பத், செயலாளர் ஜீவா, பொருளாளர் ஜெபகுமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.