கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பி.ஆர்.நடராஜன் எம்.பி கலந்துக்கொண்டு பேசினார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுகையில், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழகத்திலுள்ள சிறுபான்மை மக்களை இந்த அரசு பாதுகாக்கும் என்றார். ஆனால், மாநிலங்களவையில் 11 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நாடு முழுவதும் உள்ள பதற்ற நிலை ஏற்பட்டு இருக்காது. ஆனால், மத்திய அரசிற்கு சாதகமாக வாக்களித்து விட்டு சட்டசபையில் அதிமுக கபடநாடகம் போடுவதாக குற்றம்சாட்டினார்.
எனவே, உடனடியாக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று கேரளாவைப் போல ஓர் திர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக கூறிய முதலமைச்சர் நடைபெற்று கொண்டு இருக்கும் சட்டமன்ற கூட்டத்திலேயே அதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.