மேட்டுப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சியினர் சார்பில் மாபெரும் பேரணி

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.

ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் வி. எம் .இ .முகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி பேரணியை தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்

மேலும், பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் தாங்கள் இந்தியன் என்பதை உணர்த்தும் விதமாக தனித்தனியாக தேசியக்கொடியை எடுத்தும் பேரணியின் கூட்டத்தின் நடுவே சுமார் 100 அடி நீளமுள்ள தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி பிடித்த படியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் முழங்கிய படியும் பேரணியாக சென்றனர்.

கோப்ரட்டீவ் காலனியில் இருந்து காரமடை ரோடு அண்ணாஜிராவ் ரோடு வழியாக சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் வரை பேரணியாக சென்று பெரிய பள்ளிவாசல் திடலில் முடிவடைந்தது. இந்த பேரணியை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரணி செல்லும் வழி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்து.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...