பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு மருத்துவமனையின் செயலி அறிமுகம்..!

கோவை: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

கோவை: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை டீன் ராமலிங்கம், நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி மருத்துவமனை செயலி, லோகோ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷணன் தலைமை வகித்து பேசினார்.

வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 8000 மூளை அறுவை சிகிச்சையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சையும் இதுவரை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருகிறது.

மேலும், விபத்தின் போது தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் அவசர உதவி சிகிச்சைக்கு 7449 108 108 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராஜேந்திரன், பாலு ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...