வால்பாறையில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை சாலையில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை சாலையில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஸ்டான்மோர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலம் உள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இந்த குறுகிய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. இதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.



இதன் காரணமாக இப்பகுதி வழியாக செல்லக்கூடிய சோலையார் அணை, உருளிக்கல், குரங்குமுடி, இஞ்சிப்பாறை, மானிக்கா, வில்லோனி, மழுக்கப்பாறை மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி சாலை ரொட்டிக்கடை பழைய வால்பாறை வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலம் கட்டி முடிய குறைந்தது 6 மாதம் வரை ஆகலாம் என்றும் இது தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வியாபாரிகள் சங்கத்தினர், ரொட்டிக்கடை வழியாக சுற்றிச்செல்வது மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கும், மேலும் ஸ்டான்மோர் பகுதி மக்களுக்கு பேருந்து வசதி கிடைக்காது. ஆகவே, பழைய பாலத்தை இடிக்காமல் அப்பகுதியிலேயே மாற்றுப்பாலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கோரிக்கையை அனைவரும் கையெழுத்திட்டு சார் ஆட்சியருக்கு அனுப்ப முடிவெடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...