கோவையில் காதலர் தின கொண்டாட்டம்; சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்..!

கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.



இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை இரு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்ட இரு ஜோடிகளும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இன்று மட்டும் 4 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்படுவதாகவும், இரு திருமணங்கள் முடிந்த நிலையில், மாலையில் இரு திருமணங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். சாதிய கட்டுமானங்கள் தகர்த்து போக சாதி மறுப்பு காதல் திருமணங்கள் அவசியம் எனவும் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இதுவரை கோவை பெரியார் படிப்பகத்தில் 4500 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் சிறப்பாக வாழ்கையை நடத்துகின்றனர் எனவும் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், காதல் திருமணம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், இன்று காதலர் தினம் என்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்து திருமணம் செய்து இருப்பதாக காதல் திருமணம் செய்த வழக்கறிஞர் சீனிவாசன் தெரிவித்தார்.



மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு பெரியார் படிப்பக வாசலில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களும், ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் கேக் வெட்டி உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...