கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி தப்பி ஓட்டம்..!

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறைச்சாலையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், வெடிகுண்டு வழக்கில் கைதான கைதிகள், மாவோயிஸ்ட்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1800க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.



மேலும், இந்த சிறைச்சாலையில் அவசர சிகிச்சைக்காக சிறை மருத்துவ பிரிவு உள்ளது. அதேசமயத்தில் சிறைவாசிகளுக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் சிறைவாசிகளுக்கு சிகிச்சைகள் அளிக்க வாரந்தோறும் சனிக்கிழமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (31) என்ற விசாரணைக் கைதியை நேற்று இரவு கோவை மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை சுப்பிரமணியம் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பியோட முற்பட்டார்.



இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசாரும் மருத்துவமனையின் தனியார் காவலர்களும் சுப்பிரமணியத்தை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். இதைத்தொடர்ந்து தகவலறிந்த வந்த பந்தய சாலை சாலை போலீசார், விசாரணைக் கைதி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

போலீஸ் பிடியில் இருந்த கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நிலையில் தப்பியோடிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...