கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி தப்பி ஓட்டம்..!

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறைச்சாலையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், வெடிகுண்டு வழக்கில் கைதான கைதிகள், மாவோயிஸ்ட்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1800க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.



மேலும், இந்த சிறைச்சாலையில் அவசர சிகிச்சைக்காக சிறை மருத்துவ பிரிவு உள்ளது. அதேசமயத்தில் சிறைவாசிகளுக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் சிறைவாசிகளுக்கு சிகிச்சைகள் அளிக்க வாரந்தோறும் சனிக்கிழமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (31) என்ற விசாரணைக் கைதியை நேற்று இரவு கோவை மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை சுப்பிரமணியம் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பியோட முற்பட்டார்.



இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசாரும் மருத்துவமனையின் தனியார் காவலர்களும் சுப்பிரமணியத்தை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். இதைத்தொடர்ந்து தகவலறிந்த வந்த பந்தய சாலை சாலை போலீசார், விசாரணைக் கைதி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

போலீஸ் பிடியில் இருந்த கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நிலையில் தப்பியோடிய சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...