கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்ற மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்ற மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் சி.பி.ஐ,. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வரும் 25ம் தேதி வரை 5 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், இந்த பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.