நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெப்பக்காடு மசினகுடி சாலையின் இருபுறமும் காய்ந்த புற்களை ஆறு மீட்டர் அகலத்தில் தீ வைத்து வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மசினகுடி வனச்சரகத்தில் சாலையோரம் மற்றும் வனப்பகுதியின் உள்ளே என 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் நடைபெறுகின்றன.
முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்காரா உள்ளிட்ட வனச்சரகங்களில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதேபோல் காய்ந்த புற்கள் கொடிகள் எரிக்கப்பட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, கார்குடி, முதுமலை ஆகிய சரகங்களில் 300 மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீ ஏற்படாமல் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், இதற்காக 120 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் அருகில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டுத் தீ முதுமலைக்குள் பரவியதால் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த வருடம் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

தெப்பக்காடு மசினகுடி சாலையின் இருபுறமும் காய்ந்த புற்களை ஆறு மீட்டர் அகலத்தில் தீ வைத்து வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மசினகுடி வனச்சரகத்தில் சாலையோரம் மற்றும் வனப்பகுதியின் உள்ளே என 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் நடைபெறுகின்றன.
முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்காரா உள்ளிட்ட வனச்சரகங்களில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதேபோல் காய்ந்த புற்கள் கொடிகள் எரிக்கப்பட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, கார்குடி, முதுமலை ஆகிய சரகங்களில் 300 மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீ ஏற்படாமல் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், இதற்காக 120 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் அருகில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டுத் தீ முதுமலைக்குள் பரவியதால் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த வருடம் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.