கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டினை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு. வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டினை வேட்டையாடிய சிறுத்தையால் பரபரப்பு. வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அருகே உள்ளது சிட்டேபாளையம் கிராமம். கால்நடை வளர்ப்பு அதிகம் கொண்ட இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளதால் அடிக்கடி காட்டுயானைகளால் பயிர்சேதம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த கிராமத்தில் சிறுத்தை ஓன்று நுழைந்து பசுமாட்டினை வேட்டையாடி இழுத்து சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டேப்பாளையத்தில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயி முருகன் என்பவர் வாழை விவசாயம் செய்து வருவதுடன் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வாழை தோட்டத்தினுள் பசு மாட்டினை கட்டி வைத்து விட்டு அருகில் உள்ள தனது வீடு திரும்பியுள்ளார்.
பின்னர், இரவு அங்கு மாடு அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது மாட்டினை சிறுத்தை ஒன்று அடித்து இழுத்து சென்றுள்ளது, இதனை கண்டு அதிர்ந்து போன விவசாயி முருகன் அருகில் இருந்த மற்ற விவசாயிகளை உதவிக்கு அழைத்து சிறுத்தையை விரட்டி பசுமாட்டினை மீட்க முயற்சி செய்துள்ளார். அதறகுள் சிறுத்தை பசுவினை கொன்று பாதியை உணவாக்கி விட்டு சென்றுவிட்டது
பின்னர், இது குறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பசுமாட்டின் உடல் மற்றும் சிறுத்தையின் கால் தடயங்களை ஆய்வு செய்தனர்
இது குறித்து பேசிய கிராம மக்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கே நுழைந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடியுள்ளதால் அச்சமடைந்துள்ளதாகவும் ஏற்கனவே நான்கு முறைக்கும் மேல் ஆடு, நாய்களை வேட்டையாடியுள்ளதால் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.