கோவை: கடந்த 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று, பிப் 9 ஆம் தேதி கோத்தகிரியில் நடைபெற்றது
கோவை: கடந்த 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று, பிப் 9 ஆம் தேதி கோத்தகிரியில் நடைபெற்றது.
பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சேராததை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், பசுந்தேயிலை விவசாயிகளுக்கு தொழிற் சாலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தின் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பண்டைய பழங்குடி படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் காேத்தகிரியி்ல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். செவணன கவுடர், ஜோகிகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சேராததை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், பசுந்தேயிலை விவசாயிகளுக்கு தொழிற் சாலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தின் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பண்டைய பழங்குடி படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் காேத்தகிரியி்ல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். செவணன கவுடர், ஜோகிகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.