கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீ சுப்பிரமணியரை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அங்க அலகு காவடி குத்தியும், பறவை காவடியில் தொங்கியபடியும் காவடி மற்றும் பால்குடம் சுமந்து வந்தனர். முன்னதாக நல்லகாத்து மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாள வாத்தியங்கள் முழங்க கரகாட்டத்துடன் நல்லகாத்து மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு காந்தி சிலை வளாகம் பழைய பேருந்து நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. அரோகரா கோஷத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு பால் மற்றும் தீர்த்த அபிஷேகத்திற்குப்பின் தீபாரதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நகராட்சி ஆணையர் பவன்ராஜ். வட்டாட்சியர் வெங்கடாசலம் துவக்கி வைத்தனர். வால்பாறை அரசு கல்லூரி முதல்வர் முரளீதரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு மகா அபிஷேகமும் தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இவ்விழாவில் வால்பாறை பகுதியிலுள்ள 56 எஸ்டேட்ட பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீ சுப்பிரமணியரை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அங்க அலகு காவடி குத்தியும், பறவை காவடியில் தொங்கியபடியும் காவடி மற்றும் பால்குடம் சுமந்து வந்தனர். முன்னதாக நல்லகாத்து மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாள வாத்தியங்கள் முழங்க கரகாட்டத்துடன் நல்லகாத்து மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு காந்தி சிலை வளாகம் பழைய பேருந்து நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. அரோகரா கோஷத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு பால் மற்றும் தீர்த்த அபிஷேகத்திற்குப்பின் தீபாரதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நகராட்சி ஆணையர் பவன்ராஜ். வட்டாட்சியர் வெங்கடாசலம் துவக்கி வைத்தனர். வால்பாறை அரசு கல்லூரி முதல்வர் முரளீதரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு மகா அபிஷேகமும் தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இவ்விழாவில் வால்பாறை பகுதியிலுள்ள 56 எஸ்டேட்ட பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.