மேட்டுப்பாளையத்தில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காட்டூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

நேற்று இரவு முதல் கோவிலில் யாக சாலைகள் அமைத்து பல்வேறு சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பள்ளி எழுச்சியினை தொடர்ந்து மங்கள இசை முழங்க நான்காம் கால வேள்விகள் நடத்தப்பட்டு மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



தமிழ் முறையில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவிலைச் சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமானது நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருநெறிய தெய்வத்தமிழ் முறையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...