கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று இரவு முதல் கோவிலில் யாக சாலைகள் அமைத்து பல்வேறு சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பள்ளி எழுச்சியினை தொடர்ந்து மங்கள இசை முழங்க நான்காம் கால வேள்விகள் நடத்தப்பட்டு மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தமிழ் முறையில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவிலைச் சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமானது நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருநெறிய தெய்வத்தமிழ் முறையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நேற்று இரவு முதல் கோவிலில் யாக சாலைகள் அமைத்து பல்வேறு சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பள்ளி எழுச்சியினை தொடர்ந்து மங்கள இசை முழங்க நான்காம் கால வேள்விகள் நடத்தப்பட்டு மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தமிழ் முறையில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவிலைச் சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமானது நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருநெறிய தெய்வத்தமிழ் முறையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.