கேரளாவில் இருந்து கோவைக்கு போதைமருந்து கடத்தி வந்த இருவர் கைது; போலீசார் விசாரணை

கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு LSD எனும்‌ போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள்‌ மற்றும்‌ MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு LSD எனும்‌ போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள்‌ மற்றும்‌ MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர்‌ பீளமேடு சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு போதைப்பொருள்‌ விற்பனை செய்வதாகவும்‌ மேலும்‌ போதைப்பொருளை வெளியூர்களில்‌ இருந்து கடத்தி வருவதாகவும்‌ கிடைத்த தகவலின்படி கோவை மாநகர்‌ அவினாசி சாலையில்‌ உள்ள கல்லூரி பகுதியில்‌ கோவை போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர்‌ வின்சென்ட்‌ அவர்கள்‌ தலைமையில்‌ காவல்‌ ஆய்வாளர் சரவணன்‌ மற்றும்‌ போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள்‌ கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஷ்‌ மகன்‌ தீபக்‌ (23) மற்றும்‌ கேரளா பாலக்காடு சித்தூரை சேர்ந்த பாபு ஜெயன்‌ மகன்‌ ஜித்‌ (21) ஆகியோர்கள்‌ என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரிடமும்‌ விசாரித்த போது, அவர்கள்‌ இருவரும்‌ கேரளாவிலிருந்து கோவைக்கு MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ மற்றும்‌ LSD எனும்‌ போதை மருந்து தடவிய அட்டை வில்லைகளை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபர்களிடம்‌ இருந்து போதைப்‌ பொருட்களை கைப்பற்றி இருவரையும்‌ கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்‌ இந்த வழக்கில்‌ தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...