திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.
திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.
திருப்பூர், செரிப் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் அவரது மனைவி தங்கம். இவர்களது மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மருந்து பாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இதுகுறித்து சிறுவன் கூறும்போது, கடந்த சில நாட்களாக நான் செய்திகளில் பார்க்கும்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுப் பல பொதுமக்கள் உயிரிழப்பதை அறிந்தேன். இதுகுறித்து நான் மிகுந்த வேதனைப்பட்டேன். ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பின்னர், எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அரைத்து சாறு தயார் செய்தேன். இதுகுறித்து எனது பள்ளி முதல்வரிடம் தெரிவித்தேன்.
பின்னர், அவர் எனக்கு விடுமுறை அனுமதி அளித்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தேன். மேலும், இதனுடன் சஞ்சீவ் வேறு மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். பின்னர், இதை அரசு மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க கொண்டு வந்தேன் என்றார். இதையடுத்து, தனது கண்டுபிடிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து சென்றார். மேலும், நாளை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலிகை மருந்தை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார்.