திருப்பூரில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் 9ம் வகுப்பு மாணவன்..! ஆய்விற்கு அனுப்புமாறு ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.

திருப்பூர், செரிப் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் அவரது மனைவி தங்கம். இவர்களது மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 



இவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மருந்து பாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

இதுகுறித்து சிறுவன் கூறும்போது, கடந்த சில நாட்களாக நான் செய்திகளில் பார்க்கும்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுப் பல பொதுமக்கள் உயிரிழப்பதை அறிந்தேன். இதுகுறித்து நான் மிகுந்த வேதனைப்பட்டேன். ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பின்னர், எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அரைத்து சாறு தயார் செய்தேன். இதுகுறித்து எனது பள்ளி முதல்வரிடம் தெரிவித்தேன்.

பின்னர், அவர் எனக்கு விடுமுறை அனுமதி அளித்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தேன். மேலும், இதனுடன் சஞ்சீவ் வேறு மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். பின்னர், இதை அரசு மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க கொண்டு வந்தேன் என்றார். இதையடுத்து, தனது கண்டுபிடிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து சென்றார். மேலும், நாளை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலிகை மருந்தை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...