திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக துவக்கப்பட்டது. 800 காளைகள் 600 காளையர்கள் பங்கேற்ற இந்த போட்டியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று, பிப்., 2 ஆம் தேதி துவங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக துவக்கப்பட்டது. 800 காளைகள் 600 காளையர்கள் பங்கேற்ற இந்த போட்டியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று, பிப்., 2 ஆம் தேதி துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் அழகு மலையில் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. இந்த போட்டியில் 800 காளைகள் மற்றும் 600 காளையர்கள் பங்கேற்பதற்கு முன் பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்படி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்க ஐந்து பேர்கொண்ட 7 மருத்துவ குழுக்களும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இருசக்கர வாகனம் குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளையை அடக்கி வருகின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.