மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு தங்க தேர் திருவீதி உலா!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனம், அன்ன பஷிவாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து, மதியம் ஒரு மணிக்கு மலையப்பசாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தங்கதேரில் மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. மேளதாளங்களுடன் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க தங்க தேரானது நான்கு மாட வீதிகளின் வழியே வந்து மீண்டும் நிலையை அடைந்தது.



அப்போது, பெண்கள் தட்டில் அவல், பூ, பழங்கள், இனிப்புகள் வைத்து மலையப்பசாமிக்கு படைத்து ஆழத்தி எடுத்து வரவேற்றனர். இந்த தங்க தேர் வைபவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...