மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு தங்க தேர் திருவீதி உலா!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனம், அன்ன பஷிவாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து, மதியம் ஒரு மணிக்கு மலையப்பசாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தங்கதேரில் மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. மேளதாளங்களுடன் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க தங்க தேரானது நான்கு மாட வீதிகளின் வழியே வந்து மீண்டும் நிலையை அடைந்தது.



அப்போது, பெண்கள் தட்டில் அவல், பூ, பழங்கள், இனிப்புகள் வைத்து மலையப்பசாமிக்கு படைத்து ஆழத்தி எடுத்து வரவேற்றனர். இந்த தங்க தேர் வைபவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...