வால்பாறையில் மீண்டும் ஒரு சிறுத்தை இறப்பு..! அதிர்ச்சியில் வனத்துறை

கோவை: வால்பாறையில் மீண்டும் ஒரு சிறுத்தை புலி இறந்த சம்பவம், வனத்துறையினருக்கும் விலங்கியல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கோவை: வால்பாறையில் மீண்டும் ஒரு சிறுத்தை புலி இறந்த சம்பவம், வனத்துறையினருக்கும் விலங்கியல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

வால்பாறை சோலையார் அணை பகுதியில் உள்ளது முருகாளி தேயிலை தோட்டம். கேரள எல்லையை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. 

இதில் புலி, சிறுத்தை, யானை உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் இன்று சிறுத்தை இறந்து கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர்.



வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரகர் தங்கராஜ் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டார். 

தொடர்ந்து, உடல் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தையின் முக்கிய பாகங்கள் கோவையிலுள்ள ஆய்வகவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீதமுள்ளவை எரியூட்டப்பட்டது. முள்ளம் பன்றிக்கும் சிறுத்தைக்கும் ஏற்பட்ட சண்டையில் சிறுத்தை இறந்திருக்கலாம் என்று வன அலுவலர்கள் தெரிவித்தனர். 

ஒரே வாரத்தில் இரண்டு சிறுத்தை புலிகள் இறந்தது மிருக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...